×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மகன்.! காப்பாற்ற சென்ற தந்தை.! கிராமத்தையே உலுக்கிய சம்பவம்.!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மகன்.! காப்பாற்ற சென்ற தந்தை.! கிராமத்தையே உலுக்கிய சம்பவம்.!

Advertisement

மழையில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயியான இவருக்கு 2 மகள்களும், சங்கர் என்ற ஒரு மகனும் இருந்தனர். 2 மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தநிலையில் மகன் சங்கருடன் வசித்து வந்துள்ளார். சங்கர் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனையடுத்து மழை நின்றவுடன் சங்கர் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக தனது வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. 

உடலில் மின்சாரம் பாய்ந்து  பலத்த காயம் அடைந்த சங்கர் அலறல் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சங்கரின் தந்தை முத்துசாமி வேகமாக ஓடிவந்து அருகில் கிடந்த ஒரு மரக்குச்சியை எடுத்து, மின் கம்பியை அகற்ற முயற்சித்தார். அப்போது அந்த குச்சி மழையில் நனைந்து ஈரமாக இருந்ததால் முத்துச்சாமி மீதும் மின்சாரம் பாய்ந்தது. 

இதனால் முத்துசாமி  மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவத்தால் தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dad #son #electric shock
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story