×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலைக்கு செல்லாத கணவனை கடப்பாரையால் தாக்கிய மனைவி!

வேலைக்கு செல்லாத கணவனை கடப்பாரையால் தாக்கிய மனைவி!

Advertisement

திருவள்ளூர் அடுத்த மப்பேடு கூவம் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு பாலச்சந்தர், பவன் ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிய நிலையில், இளைய மகன் பவன் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் சீனிவாசனுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததால்,  கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ராஜேஸ்வரி அருகிலுள்ள தெர்மாக்கோல் கம்பெனியில் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சீனிவாசனுக்கு, ராஜேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் அதேபோல் தகராறு ஏற்பட்ட நிலையில் சீனிவாசன், தனது மனைவி ராஜேஸ்வரியை சரமாக தாக்கியுள்ளார்.

அதன் பின்னர் இரவு 10 மணி அளவில் சீனிவாசன் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்த கடப்பாறையை எடுத்து வந்த ராஜேஸ்வரி கணவரை பலமாக தாக்கியுள்ளார். இதில் சீனிவாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மகன் பாலச்சந்தர் கொடுத்தார் புகார் அடிப்படையில் ராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#husband and wife #Crime #thiruvallur #Mappedu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story