×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடுராத்திரியில் எஸ்.பி ஆபிஸில் தனிமையில் உல்லாசமாக இருந்த ஆண், பெண் காவலர்கள்.. வசமாக சிக்கியது எப்படி..?

நடுராத்திரியில் எஸ்.பி ஆபிஸில் தனிமையில் உல்லாசமாக இருந்த ஆண், பெண் காவலர்கள்.. வசமாக சிக்கியது எப்படி..?

Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் காவிரி நகர் அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட எஸ்.பி அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் 100கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பூட்டிய ஏசி அறையில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறிப்போன இரவு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக ஆயுதப்படை காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் உள்பக்கம் தாழ்ப்பால் போட்டிருந்த கதவை தட்டி உள்ளனர். பின்னர் நீண்ட நேரம் கழித்து கதவு திறக்கப்பட்டது. அப்போது ஆண் பெண் காவலர்கள் இருவர் அரைகுறை உடையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ஆண் காவலர் அதே அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் என்றும் பெண் காவலர் அருகிலுள்ள குத்தாலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பணியின் போது காவல்துறையினரே ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதால் அவர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவமானது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#SP Office #Male & female plice #Frolicking alone
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story