பட்டப்பகலில் பயங்கரம்.. பெண்களை குறி வைத்து இடித்து தள்ளிய அடாவடி ஆட்டோ ஓட்டுனர்..!
பட்டப்பகலில் பயங்கரம்.. பெண்களை குறி வைத்து இடித்து தள்ளும் அடாவடி ஆட்டோ ஓட்டுனர்..!
சேலத்தில அதி வேகமாக ஆட்டோ ஓட்டிய வரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் திட்டியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் அவர்களை பழிவாங்க எண்ணி அந்தப் பெண்களை பின் தொடர்ந்து சென்று ஆபாச வார்த்தைகளால் திட்டி, ஆட்டோவால் இடித்து தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அங்கிருந்து மற்ற வாகன ஓட்டிகள் அந்த ஆட்டோ ஓட்டுனரை சத்தம் போட்டு அந்த இரு பெண்களையும் மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரமடங்காத அந்த ஆட்டோ ஓட்டுனர் அந்தப் பெண்களின் இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து சென்று அந்தப் பெண்கள் சென்ற வாகனத்தின் மீது வேகமாக மோதி அவர்களை கீழே தள்ளிவிட்டு அந்த ஆட்டோ ஓட்டுனர் நிற்காமல் சென்றுள்ளார்.
இதனையடுத்து கீழே விழுந்த அந்த இரு பெண்களையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பட்டப் பகலில் ஆட்டோ ஓட்டுனர் இரு பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362