தமிழகத்தில் அதிகபட்சமாக எந்த தொகுதியில் வாக்கு பதிவு தெரியுமா.?
நேற்று தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல
நேற்று தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
நேற்று இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362