×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போலியாக ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.! அடுத்த சில நாட்களிலேயே நடிகருக்கு நேர்ந்த துயரம்!!

hero dead after pasting funeral poster

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வசித்து வருபவர் ஆர்எஸ் கோபால். இவர் வலியுடன் காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். 

இந்நிலையில் அவர் தற்போது பூதமங்கலம் போஸ்ட் என்ற திரைப்படத்தில் வட்டம் வரதன் என்ற பெயரில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் இறப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனால் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் ஆங்காங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும். சவப்பெட்டியில் மாலைகளுடன் இருப்பது போன்ற வீடியோக்களும் வெளியானது இதனை அவர் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். 

இதனை கண்ட ஆர்.எஸ் கோபாலின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர் இறந்துவிட்டதாக கருதி அவரது வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மாலையுடன் சென்றுள்ளனர். ஆனால் அவர் இது தான் நடிக்கும் புது படத்திற்கான போஸ்டர்கள் என்று விளக்கம் அளித்து அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார். மேலும் ஆங்காங்கு ஒட்டப்பட்ட போஸ்டர் அவரே கிழித்துள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஆர்.எஸ் கோபால் உண்மையிலேயே உயிரிழந்துள்ளார்.அதனை தொடர்ந்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

ஆனால் இதனை கண்ட சிலர் இது சினிமாவிற்காக ஒட்டப்பட்டிருக்கலாம் என கருதியுள்ளனர். பின்னர் தாமதமாகவே இது குறித்த தகவல்கள் தெரிந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#poster #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story