அரசுப் பள்ளிகளில் இனி 6-ஆம் வகுப்பு முதல் புதிய பாடம்.! துணை முதல்வர் அறிவிப்பு .!
அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் 11வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.
சற்றுமுன் தொடங்கிய சட்டப்பேரவையில், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றிவருகிறார். அப்போது பேசிய அவர், 2021-22 ஆம் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362