×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: கனமழை காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி உத்தரவு..!!

#Breaking: கனமழை காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி உத்தரவு..!!

Advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடுள்ள செய்தியின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக திருவள்ளூர், கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உட்பட 23 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தொடர் கனமழையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அத்துடன் நாகை மாவட்டத்திலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#heavy rainfall #school leave #tamilnadu #Thiruuvallur #thanjavur #நாகை
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story