×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#RainAlert: இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்..! உஷாரா இருங்க..!!

#RainAlert: இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..! உஷாரா இருங்க..!!

Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் மார்ச் 24-ஆம் தேதியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதேபோல தலைநகர் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu news #தமிழ்நாடு #சென்னை வானிலை ஆய்வு மையம் #chennai meotrological centre #Heavy rain update
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story