×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கனமழை எச்சரிக்கை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Advertisement

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கும்,  தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இதனை தொடர்ந்து மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் படிப்படியாக நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறக் கூடும் என்று இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்கது.

இந்த கனமழையின் முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கும்,  தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rain alert #heavy rain #cyclone #thiruvarur #Tanjavur #School Colleges Holiday
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story