×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கன மழை எதிரொலி!.. 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: வெளியான அறிவிப்பு..!

கன் மழை எதிரொலி!.. 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: வெளியான அறிவிப்பு..!

Advertisement

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது. கடந்த 8 ஆம் தேதி சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கும் புதுச்சேரிக்கும் நடுவே மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னர் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவான அதே பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும் பெய்து வரும் நிலையில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன்படி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rain fall #heavy rain #school #holiday
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story