இரண்டு நாட்களுக்கு வெளுத்துவாங்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
heavey rain in tamilnadu
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மேலும் வருகிற 27- ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும், அடுத்தவார இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய கூடும். தமிழகத்தின் இதர மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362