இனி கவலை வேண்டாம்.! ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் 24-ம் தேதி முதல் நாடுமுழுவதும் பயணிகள் ரயி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் 24-ம் தேதி முதல் நாடுமுழுவதும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மாநிலங்களுக்கு இடையே அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக முன்பதிவுக் கொண்ட ரயில் பெட்டிகளில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மார்ச் 17 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளிலும் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில் எண் 06867 / 06868 விழுப்புரம் - மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயில்; 10 செகண்ட் க்ளாஸ் பெட்டிகளுடன் முன்பதிவில்லா டிக்கெட்கள் மூலம் பயணிக்கும் வகையில் இயக்கப்படவுள்ளது.
அதேபோல் ரயில் எண் 06087 / 06088 அரக்கோணம் - சேலம் - அரக்கோணம் MEMU ரயில், இரண்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் கம் செகண்ட் க்ளாஸ் சிட்டிங் பெட்டிகள் மற்றும் 6 செகண்ட் க்ளாஸ் பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.
ரயில் எண் 06115 / 06116 சென்னை எழும்பூர் - புதுச்சேரி - சென்னை எழுப்பூர் சிறப்பு ரயில்; இரண்டு செகண்ட் க்ளாஸ் சேர் கார் பெட்டிகள், 7 ஜென்ரல் செகண்ட் க்ளாஸ் பெட்டிகள் என முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. மேலும், ரயில் எண் 06327 - 06328 புனலூர் - குருவாயூர் சிறப்பு ரயில்.
மேற்குறிப்பிட்ட ரயில்களுக்கான முன்பதிவு இல்லாத டிக்கெட்களை இன்று (மார்ச் 15) முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362