×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! அரசாணை வெளியீடு.!

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! அரசாணை வெளியீடு.!

Advertisement

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, ஜனவரி 1 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார். 

இந்த நிலையில், இதுகுறித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதாகவும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்வு அளிக்கப்படும் என்றும், 2016ம் ஆண்டுக்கு முந்தைய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Govt Employee
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story