×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தலைக்கேறிய மதுபோதை.! 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!

தலைக்கேறிய மதுபோதை.! 72 வயது பாட்டி என பார்க்காமல் பேரன் செய்த கொடூரச்செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள பசுவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீலா. 72 வயது நிரம்பிய இவர், அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இவருடைய மகன் ரங்கநாதன் சென்னை வானகரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் ரங்கநாதனின் மகன் ஜெகன் (30) கடந்த 20- ஆம் தேதி பசுவன்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். இந்தநிலையில், 
நேற்று முன்தினம் இரவில் மதுபோதையில்  வீட்டுக்கு வந்த ஜெகன், பாட்டியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். 

பாட்டி மறுத்ததால் மதுபோதையில் இருந்த ஜெகன், சுசீலாவின் தலையில் தோசைக்கல்லால் அடித்துள்ளார். இதில் சுசீலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுசீலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தலைமறைவான ஜெகனை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#grand ma #grand son
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story