×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடுமலை ஆணவக்கொலை சங்கரின் மனைவிக்கு மீண்டும் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

gowsalya get married again

Advertisement


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யாவை கடந்த 2016 ல்  காதல் திருமணம் செய்து கொண்டார். 

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் பெற்றோரும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 2016 மார்ச் 13-ஆம் தேதி பட்டப்பகலில் உடுமலையில் வைத்து சங்கர் மற்றும் கெளசல்யா இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

                                           

அந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கெளசல்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர்தப்பினார். இந்தக் கொலை வழக்கில் கவுசல்யாவின் உறவினர்கள் மற்றும் கூலிப் படையைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சங்கரின் கொலைக்குப் பின்னர் சாதி ஒழிப்புப் போராளியாக கெளசல்யா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதிக்கு எதிராக அழுத்தமாகக் குரல்கொடுத்து வருகிறார். பல தொலைக்காட்சிகளில் சாதனையாளர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தனது உறவினர்களுக்கே தண்டனை பெற்றுக்கொடுத்த கெளசல்யா, சங்கரின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, அதனைக் கவனித்து வருகிறார். இந்நிலையில், இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் அவருக்கு இரண்டாவது திருமணம், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது.

கெளசல்யா நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தியை திருமணம் செய்துகொண்டார். இவரிடம் தான் கெளசல்யா பறை இசைக் கலையை கற்றார். இந்த திருமணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#udumalaipet murder #sangar murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story