மீண்டும் தங்கம் விலை உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
gold rate increased

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வந்தது. கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
சமீபத்தில் சவரன் ரூ.43,328க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை அதிர்ச்சியடையவைத்தது. இதனையடுத்து கடந்த 4 நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வந்தது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை சுமார் 2,400 ரூபாய் வரை குறைந்தது.
நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.40,104-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 5,013- ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,105க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.