×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காத்துக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய கொத்தனார்!! காலையில் எழுந்தபோது காத்திருந்த அதிர்ச்சி..

காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கிய கொத்தனார் வீட்டில் 7 பவுன் நகைகளை மர்ம நபர்க

Advertisement

காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கிய கொத்தனார் வீட்டில் 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

சென்னை ஐய்யப்பன்தாங்கல் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). கொத்தனார் வேலை பார்த்துவரும் இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கியுள்ளார். அப்போது ஒரே புழுக்கமாக இருந்ததால் காற்று வருவதற்காக கதவை திறந்துவைத்துவிட்டு தூங்கியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் பதறிப்போன மணிகண்டன் நடந்த சம்பவம் குறித்து போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Chennai crime
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story