திருமண நாளில் மணப்பெண் பகீர் காரியம்... கதவை திறந்த பெற்றோர் கண்ட பேரதிர்ச்சி காட்சி.!
திருமண நாளில் மணப்பெண் பகீர் காரியம்... கதவை திறந்த பெற்றோர் கண்ட பேரதிர்ச்சி காட்சி.!
திருமணத்தன்று மணப்பெண் மாயமானதால், காவல்துறையினர் தீவிரமாக அவரை தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அடுத்த சாம்பவர்வடகரை பகுதியில் 21 வயதுடைய ஒரு இளம்பெண் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு அதே பகுதியில் உள்ள ஒரு வாலிபருடன் சமீபத்தில்தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் வீட்டிலிருந்து அவரது உறவினர்கள் மணப்பெண்ணை அழைப்பதற்காக, அதிகாலை வந்துள்ளனர். மேளதாளத்துடன் அவர்கள் பெண்ணின் வீட்டிற்கு வந்து, மணப்பெண்ணின் அறையை திறந்தபோது அங்கு அவரை காணவில்லை.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் பெற்றோர் வீடு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், வீட்டின் பின்புறம், முன்புறம் என அனைத்து பகுதியிலும் தேடியுள்ளனர். இருப்பினும் தனது மகளை காணாததால் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362