×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அபிராமி போன்ற பெண்கள் இருக்கும் இதே ஊரில்தான் ஷில்பா போன்ற பெண்களும் உள்ளனர்!

Girl married a man who lost his one leg on train accident

Advertisement

சில தினங்களுக்கு முன்பு கள்ள கள்ள காதலால் பெற்ற பிள்ளைகளை தாயே பாலில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது போன்று கணவனுக்கு, குடும்பத்திற்கு துரோகம் செய்யும் அபிராமி போன்ற பெண்கள் ஒருபக்கம் இருக்க ரயிலில் சிக்கி தனது  ஒரு காலை இழந்த காதலனை மருத்துவமையில் வைத்து திருமணம் செய்துள்ள ஷில்பா என்ற பெண்.

பொதுவாக இன்றைய கால இளைஞர்கள் மத்தியில் தனக்கு வர போகும் துணை குறைந்தபட்சம் அழகுடனும், மாடனாகவும் இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கின்றார்கள்.

இந்நிலையில், ஐந்து மாதங்களுக்கு முன்பு ரயில் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்த காதலன் விஜய்யை அரசு மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றார் ஷில்பா.

திருமணமாகி 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போதும் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகிறார் விஜய். கால் இழந்த விஜய்யால் உன்னை எவ்வாறு காலம் முழுவதும் வைத்து காப்பாற்ற முடியும் என ஷில்பாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும் தனது கல்லூரி காதலன் தான் முக்கியம் என கருதி விஜய்யை திருமணம் செய்துகொண்டார் ஷில்பா.

ஷில்பாவின் உண்மையான காதல், கோபத்தோடு இருந்த அவருடைய பெற்றோர்களின் மனதையும் இளக வைத்திருக்கிறது. தற்போது, இரண்டு குடும்பமும் சந்தோஷமாக உறவாடுகிறார்கள்.

தற்போது, செயற்கைக் கால்கள் பொருத்திக்கொண்டு நடக்கப் பழகுகிறேன். அதன் உரசலால், கொப்புளங்கள், ரத்தம் வடிவது என வலி மிகுந்திருந்தாலும், `சீக்கிரம் சரியாகிடுவேன்.அதன்பின்னர், வேலைக்கு போய், என் அம்மாவையும் ஷில்பாவையும் உள்ளங்கையில் வெச்சுத் தாங்கணும் என்று கூறுகிறார் விஜய்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#abirami killed children #abirami husband #Shilpha
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story