×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்குவாரியில் கால் உடைந்து, முகம்சிதைந்து அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண்! அரங்கேறிய நடுநடுங்கவைக்கும் பயங்கரம்!

girl killed by lover in vellore

Advertisement

வேலூரை அடுத்த அரியூர்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் நிவேதா. பிளஸ்-2 முடித்த இவர் கடந்த சில மாதங்களாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் கேன்டீனில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிவேதா மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் பல இடங்களில்தேடியும் நிவேதா கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர்கள் கடந்த 16-ந் தேதி போலீசில் புகார் அளித்தனர்.

இதற்கிடையில் வேலூரை அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் அருகேயுள்ள கல்குவாரியில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்ட மாடு மேய்க்க சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் காணாமல் போன இளம்பெண்கள் குறித்து போலீஸ் நிலையங்களில் கொடுத்த புகார் அடிப்படையில் ஆய்வில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து நிவேதாவின் பெற்றோர்கள் அவரது டாட்டூவை வைத்து நிவேதாவை கண்டறிந்தனர். பின்னர்  விசாரணை மேற்கொண்ட போலீசார்கள் நிவேதா கடந்த சில மாதங்களாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், நிவேதாவை அவர்தான் இங்கு அழைத்து வந்திருக்கவேண்டும் எனவும் சந்தேகம் அடைந்துள்ளனர்.

 மேலும் அப்பொழுது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு அதில் அதிரமடைந்தஹ்  வாலிபர் மலைப்பாதையில் இருந்து 80 அடி ஆழமான கல்குவாரியில் நிவேதாவை தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாம் என யூகித்துள்ளனர். மேலும் இதுகுறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vellore #Murder #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story