கணவன் சொன்ன ஒத்த வார்த்தை!! 1 வயது குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பெண்!! வெளியான பகீர் சம்பவம்!!
girl commit suicide for husband scolding
கோவையில் வசித்து வருபவர் ஈஸ்வரசாமி. இவர் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாலதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்களது சசிகுமார், மகாஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்..
மேலும் மாலதி அக்கம்பக்கத்தினருடன் சிறுசேமிப்பு சீட்டு பிடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலை காரணமாக ஈஸ்வரசாமி பழனிக்கு சென்றுள்ளார். மேலும் தனது மகன் சசிகுமாரை பள்ளிக்கு அனுப்பிய மாலதி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இந்நிலையில் 3 மணிஅளவில் தண்ணீர் வருவது குறித்து சொல்வதற்காக பக்கத்துக்குவீட்டு பெண் மாலதி வீட்டிற்கு சென்றுள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது மாலதி மற்றும் அவரது ஒரு வயது குழந்தை மகா ஸ்ரீ தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு கிடந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் சாப்பாடு செய்து வைக்கவில்லையா என கேட்டு ஈஸ்வரசாமி மனைவி மீது கோபப்பட்டு சண்டை போட்டுள்ளார். மேலும் தனது தாயிடம் குறை கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ஈஸ்வரசாமி தாயும் போன் செய்து மாலதியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாலதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும் கடிதம் என்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் என்னால் யாரும் கஷ்டப்படக் கூடாது. சீட்டு பணம் வீட்டில் உள்ளது. அனைவருக்கும் கொடுத்து விடுங்கள், என்னை மன்னித்துவிடுங்கள் மாமா என்று எழுதி இருந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.