×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜவுளிக்கடை உரிமையாளர்.. போக்சோவில் கைது..!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜவுளிக்கடை உரிமையாளர்.. போக்சோவில் கைது..!

Advertisement

சென்னை மயிலாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் 48 வயது நிரம்பிய ராஜேஷ். இவர் அதே பகுதியில் ஜவுளி கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்த ஜவுளி கடையில் பாலவாக்கத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது குடும்ப சூழ்நிலையியின் காரணமாக விற்பனை பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பணிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி மிகவும் சோர்வுற்று காணப்பட்டுள்ளார். மேலும் இவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே சென்றுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது சிறுமி பணிபுரியும் ஜவுளிக்கடை உரிமையாளர் அடிக்கடி சிறுமியுடன் பாலியல் உறவு வைத்தது தெரியவந்தது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஜவுளி கடை உரிமையாளரை போக்சோவில் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sexual Harrasment #arrested #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story