பிரபல ரவுடி வெடிகுண்டு வீசி படுகொலை... முன்விரோதம் காரணமா.? தனிப்படை அமைத்து காவல்துறை தீவிர விசாரணை.!
பிரபல ரவுடி வெடிகுண்டு வீசி படுகொலை... முன்விரோதம் காரணமா.? தனிப்படை அமைத்து காவல்துறை தீவிர விசாரணை.!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்தவர் எபனேசர். 25 வயதான இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவர் நேற்று இரவு காட்டூர் கூட்ரோடு வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் இவரது ஆட்டோவை இடித்து தள்ளியது.