×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உச்சகட்ட முறைகேட்டில் ஈடுபடும் திமுக நிர்வாகிகள்.. முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

உச்சகட்ட முறைகேட்டில் ஈடுபடும் திமுக நிர்வாகிகள்.. முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Advertisement

கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறைகளில் நடைபெற்றுவரும் ஊழல் தொடர்பாக தலைமைச் செயலாளரை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கரூரில் நடைபெறும் சாலை பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.  இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை துறையில் பல்வேறு ஊழல் நடைபெற்று வருகிறது. இது குறித்து புகார் அளித்துள்ளோம். ஐந்து முறை ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால், தரமற்ற சாலைகள் அமைக்கப்படுகின்றன. இது குறித்து எதிர்கட்சி தலைவர் சட்டமன்றத்தில் பேச வலியுறுத்தியிருக்கிறேன்‌. 

திமுக கட்சியை சார்ந்த ஆனந்த் சங்கர் என்பவருக்கு ஒப்பந்தம் போடப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடாங்கிபட்டி அருகே திமுக ஒப்பந்ததாரரின் லாரி தீ வைத்து கொளுத்தப்பட்ட நிலையில், அதிமுக நிர்வாகி மீது பழி சுமத்துகின்றனர்" என்று தெரிவித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #AIADMK #dmk #politics #Road Contract
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story