தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காரின் மீது முறிந்து விழுந்த மரம்: பெண் வங்கி அதிகாரி பரிதாப பலி; இருவர் படுகாயம்..!

காரின் மீது முறிந்து விழுந்த மரம்: பெண் வங்கி அதிகாரி பரிதாப பலி; இருவர் படுகாயம்..!

Female bank officer killed when tree fell on car Advertisement

சென்னை கே.கே.நகரில் காரின் மீது மரம் விழுந்து பெண் வங்கி அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் மங்கலம் நகர் 5-வது தெருவில் வசித்து வருபவர் கபிலன். இவருடைய மனைவி வாணி (57). இவர், கே.கே. நகரில் உள்ள ஒரு பிரைவேட் பேங்கில் வேலை செய்து வருகிறார்.

வாணி, நேற்று மாலை அவரது சகோதரி எழிலரசியுடன் காரில் லட்சுமணசாமி ரோட்டில் இருந்து பி.டி.ராஜன் ரோடு வரும் வழியில் இருக்கும் பிரைவேட் பேங்க் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையையொட்டி இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு ரோட்டின் குறுக்கே விழுந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த காரின் மீது அந்த மரம் விழுந்தது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

Female Bank Officer Killed

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அசோக் நகர், கிண்டி தீயணைப்பு துறையினர் உடனே மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே காரில் இருந்த வாணி, மரம் விழுந்ததில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த டிரைவர் கார்த்திக்கும், வாணியின் சகோதரி எழிலரசியும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து கே.கே.நகர் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Female Bank Officer Killed #kk nagar #Tree Fall #Fall on Car #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story