×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளின் தோழியான சிறுமியை கடத்தி கற்பழித்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்..!

மகளின் தோழியான சிறுமியை கடத்தி கற்பழித்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்..!

Advertisement

மகளின் தோழியான 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் தேவேந்திரன் (வயது 38). இவருக்கு கள்ளக்குறிச்சி அருகாமையில் அமைந்துள்ள ஊரில் மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் 17 வயது சிறுமி. தனது மனைவி இறந்த காரணத்தால், தேவேந்திரன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவரின் 17 வயதுடைய மகளைப் பார்ப்பதற்காக, அவருடைய தோழி பல தடவை அவரது வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது தேவேந்திரன் சிறுமியிடம் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு அடிக்கடி மகளின் தோழியிடம் பேசி வந்துள்ளார். அத்துடன் சிறுமி கோயம்புத்தூரில் வேலைக்கிடைத்து சென்றதும், தேவேந்திரனும் அவரைத் தேடி அங்கு சென்றுள்ளார்.

மேலும், மகளின் தோழியிடம் ஆசை வார்த்தைகளை கூறி, கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் பகுதிக்கு கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில், மகளை காணாத சிறுமியின் பெற்றோர் காவல் துறையினருக்கு புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது தேடுதல் வேட்டையில், தேவேந்திரனும், சிறுமியும் கேரளாவில் இருப்பது கண்டறியப்பட்டு, அழைத்து வந்தனர். பின் சிறுமியை அவரின் பெற்றோரிடம் விட்டுவிட்டு தேவேந்திரன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kovai #Kallakurichi #KERALA #harassment
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story