×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மது குடிக்க மகன் பணம் தராததால், வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை கைது!

மது குடிக்க மகன் பணம் தராததால், வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை கைது!

Advertisement

சென்னை செங்குன்றம் அருகே மது குடிக்க மகன் பணம் தராததால் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தையை கைது செய்துள்ளனர்.

சென்னை செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்தவர் குருசாமி. மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வந்துள்ளனர். 

இதில் குருசாமியின் மனைவி காலமானதால் மகன் மற்றும் மகள் வீட்டில் மாறி மாறி வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தந்தை குருசாமி மற்றும் மகன் தினேஷ் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை மது போதையில் இருந்த தனது மகன் தினேஷிடம் குடிப்பதற்கு தந்தை குருசாமி பணம் கேட்டுள்ளார். மகன் தினேஷ் பணம் இல்லை என கூறி மறுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கிருந்து சென்ற குருசாமி இரவு போதையில் மகன் வீட்டிற்கு வந்து பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ் உடனடியாக ஓடி சென்று தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளார்.

இதனையடுத்து தினேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சோழவரம் போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய குருசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Petrol Bomb #Sengundram #Crime #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story