தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருச்சி அருகே பரபரப்பு.. பிள்ளைகள் முன்பே தந்தை வெட்டி படுகொலை!

திருச்சி அருகே பரபரப்பு.. பிள்ளைகள் முன்பே தந்தை வெட்டி படுகொலை!

Father killed infront of babys in Trichy Advertisement

திருச்சி அருகே தனது பிள்ளைகள் முன்பே தந்தை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் பரணிதரன். இவர் திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பகுதியில் வாடகை வீடியோ எடுத்து தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.

trichy

இந்த நிலையில் நேற்று காலை பரணிதரனின் மனைவி வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், பரணிதரன் அவரது பிள்ளைகளுடன் வீட்டில் இருந்த போது, காரில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் பரணிதமே வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பரணிதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முன் விரோதம் காரணமாக குழுமனையை சேர்ந்த ஆட்டோ சக்தி என்கிற சக்திவேல் என்ற நபர் பரணிதரனை வெட்டி கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட பரணிதரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#trichy #Thiruvanaikaval #Murder #killed #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story