×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு, பெண் செய்த மோசமான காரியம்! கொடூர தந்தையால் துடிதுடிக்க இறந்த பச்சிளங்குழந்தை!!

father killed daughter for disturbing

Advertisement

சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் துர்கா.இவருக்கு ஆறுமுகம் என்பவருடன் திருமணம் நடைபெற்று  இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் துர்காவிற்கு அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த எல்லப்பன் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.இதனை அறிந்த ஆறுமுகம் துர்காவை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத துர்கா கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மற்றும் இருபிள்ளைகளையும் விட்டுவிட்டு கள்ளகாதலனுடன் ஓடிவிட்டார். 

 இதனை தொடர்ந்து அம்பேத்கர் நகரில் தனது கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த துர்காவிற்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ராஜ்மாதா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நிலையில் துர்கா கணவருடன் உல்லாசமாக இருப்பதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை குடிபோதையில் இருந்த எல்லப்பன் துர்காவுன் வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்பொழுது குழந்தை பசியில் அழுததால், துர்கா கணவரை விட்டுவிட்டு குழந்தைக்கு பால் கொடுக்க வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த எல்லப்பன் குழந்தையின் தலையில் அடித்து தூக்கி போட்டுவிட்டு மீண்டும் உல்லாசமாக இருந்துள்ளார். 
குழந்தை மூக்கில் ரத்தம் வழிய மூச்சுப் பேச்சில்லாமல் இறந்து கிடந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த துர்கா குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற நிலையில் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் எல்லப்பனை கைது செய்துள்ளனர். மேலும் துர்கா ஆதரவின்றி தவித்து வருகிறார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affair #dead #chiild
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story