×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

15 ஆண்டு கழித்து மனைவி, குழந்தையை பார்க்க வந்த தந்தை மகனால் வெட்டிக்கொலை..!

15 ஆண்டு கழித்து மனைவி, குழந்தையை பார்க்க வந்த தந்தை மகனால் வெட்டிக்கொலை..!

Advertisement

15 வருடங்களுக்கு பின் முதல் மனைவியையும், மகன்களையும் பார்க்க வந்த தந்தையை மகன் வெட்டிக் கொன்றதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் EB காலனி பகுதியில் வசித்து வந்தவர் கரும்பாயிரம். இவருக்கு ராதிகா என்ற ஒரு மனைவியும், மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், இவர் இரண்டாவதாக சிவசங்கரி என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது திருப்பூரில் வசித்து வருகிறார்.

தொடர்ந்து கரும்பாயிரம் கடந்த 15 ஆண்டுகளாக தனது முதல் மனைவியை பற்றியும், மகன்களைப் பற்றியும் எந்த ஒரு கவலையும் இல்லாமல், இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், திடீரென தனது முதல் மனைவியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

பின் உடனடியாக திருப்பூரில் இருந்து புறப்பட்டு தனது முதல் மனைவியான ராதிகாவை சந்தித்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்ட நிலையில், தனது முதல் மனைவியை மண்வெட்டியால் தாக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த ராதிகாவின் மூத்தமகன் ஜீவா தந்தையை கண்டித்துள்ளார்.

இருப்பினும் கரும்பாயிரம் மகன் கூறியதைக் கேட்காமல் சண்டையிட்டதால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜீவா வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கரும்பாயிரம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கரும்பாயிரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜீவாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tripur #thanjavur #dead #Murder #father
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story