நீயும் இப்படி பண்ணிட்டியேம்மா..! 3 பெண் பிள்ளைகளை பெற்றும் நிறைவேறாத ஆசை..! பூச்சி மருந்து குடித்து தந்தை தற்கொலை..
Father commit suicide for daughter love marriage
தனது மூன்று மகள்களும் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 64 வயதான மாயாண்டி. கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். முதல் இரண்டு மகள்களும் ஏற்கனவே காதல் திருமணம் செய்துள்ளனர். காதல் திருமணத்தில் விருப்பம் இல்லாத மாயாண்டி மகள்களின் விருப்பத்திற்காக அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொண்டாலும் மனதளவில் பெரும் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்களின் மூன்றாவது மகளை தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து வைக்கலாம் என்று மாயாண்டி பெரும் நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால் மூன்றாவது மகளும் தனது உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். உறவினர் என்றாலும் காதல் திருமணம் என்பதால் இந்த காதலுக்கு மாயாண்டி சம்மதம் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாயாண்டியின் கடைசி மகள் தனது உறவினரை கடந்த 28ஆம் தேதி அவரது வீட்டிலேயே வைத்து திருமணம் செய்து செய்துகொண்டார். தனது எதிர்ப்பையும் மீறி தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான மாயாண்டிஇருமனம் tமுடிந்த அன்று மதியம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
மாயாண்டி பூச்சி மருந்து குடித்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் ஆனால் சிகிச்சை பலனின்றி மாயாண்டி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் அவரது தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362