×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யாரிடம் இவ்வளவு நேரம் செல்போனில் பேசுறா... தட்டி கேட்ட தந்தை ஆத்திரத்தில் இளம்பெண் செய்த செயல்... போலீசார் விசாரணை

யாரிடம் இவ்வளவு நேரம் செல்போனில் பேசுறா... தட்டி கேட்ட தந்தை ஆத்திரத்தில் இளம்பெண் செய்த செயல்... போலீசார் விசாரணை

Advertisement

சென்னை புழல் கன்னடபாளையம் ஜீவா 2வது தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகள் கிரேசி. 23 வயதாகும் இவர் சென்னை பெருங்குடியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் செல்போனில் யாருடனோ வெகு நேரமாக பேசி வந்துள்ளார் கிரேசி. இதனை அவதானித்த தந்தை யாரிடம் தான் இவ்வளவு நேரம் பேசுகிறாய் என்று கேட்டு கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிரேசி அருகிலிருந்த பிளேடை எடுத்து இடது கையை சரமாரியாக அறுத்துக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோசப் உடனே கிரேசியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தகவலறிந்த வந்த புழல் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pulall #23 years old girl #phone call
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story