பன்றிக்காக வயலில் அமைக்கப்பட்ட மின்வேலி.! மனைவி கண் எதிரே துடிதுடித்து உயிரிழந்த விவசாயி.!
பன்றிக்காக வயலில் அமைக்கப்பட்ட மின்வேலி.! மனைவி கண் எதிரே துடிதுடித்து உயிரிழந்த விவசாயி.!
மதுரை திருமங்கலம் அருகே பன்றிக்காக வயலில் அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் அருகே உள்ள வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது மனைவியுடன் விவசாய தோட்டத்துக்கு பருத்தி எடுக்கும் பணிக்கு சென்றுள்ளார். அப்போது கதிர்வேல் என்பவரின் வயலில் பன்றி தொல்லையால் நெல் பயிருக்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்த கிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
கணவனனை காப்பாற்ற முயன்ற அவரது மனைவியும் தூக்கிவீசப்பட்டு காயத்துடன் போராடினார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தநிலையில், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த கதிர்வேலுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்தவாரம் இதேபோல் காட்பாடி அடுத்த கம்மவார் புதூர் கிராமத்தில் பன்றிக்காக வயலில் அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 24 வயது நிரம்பிய தமிழ்செல்வன் என்ற வாலிபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362