×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காலையில் வாக்கிங் சென்ற வழக்கறிஞருக்கு நிகழ்ந்த சோகம்... திருவள்ளூரில் பரபரப்பு!!

காலையில் வாக்கிங் சென்ற வழக்கறிஞருக்கு நிகழ்ந்த சோகம்... திருவள்ளூரில் பரபரப்பு!!

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகரான சம்பத்குமார். இவர் சென்னை ஹைகோர்ட்டில் அரசு வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பத் குமார் தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டவர். 

இன்றும் வழக்கம் போல் காலை 6 மணிக்கு வாக்கிங் செல்ல புறப்பட்டுள்ளார். அதாவது ஜம்புகேஸ்வரர் நகர் பகுதியில் இருக்கும் சிவன் கோவிலை சுற்றி தான் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது மழை பெய்ததால் அருகே இருந்த இரும்பு பட்டறை தொழிற்சாலை வாசலில் ஒதுங்கியுள்ளார்.

அந்த தொழிற்சாலை வாசலில் தொங்கி கொண்டிருந்த வயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத சம்பத் குமார் அந்த வயரை பிடித்துள்ளார். அதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் சம்பத் குமார். இச்சம்பவம் குறித்து  தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பத் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Sambath Kumar #lawyer
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story