அடுத்த வாரம் கல்யாணம்..! மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்..! வெளியான உண்மை..!
Family suicide before son marriage
தென்காசி மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள ரோஸ் கார்டன் என்னும் பகுதியில் வசித்து வருபவர் சந்தானம். பலசரக்கு ஏஜென்சி ஒன்றை நடத்திவரும் இவருக்கு ஸ்ரீதர் என்ற மகன் உள்ளார். ஸ்ரீதர் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், அதற்காக பலரிடம் கடன் வாங்கி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீதர் முதலீடு செய்த அணைத்து பங்குகளும் கடும் நஷ்டத்தை சந்தித்ததால் ஸ்ரீதரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்நிலையில் ஸ்ரீதருக்கு கடன் கொடுத்தவர்கள் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வீட்டிற்கு வந்து அசிங்கமாக திட்டியதாகவும், வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டிற்கு வந்து கடன் கேட்டு அவமானப் படுத்தியதால் மன உளைச்சல் தாங்க முடியாமல் ஸ்ரீதரும் அவரது தாய், தந்தையும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தற்கொலை செய்துகொண்ட ஸ்ரீதற்கு வரும் 27 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
இன்னும் சில நாட்களில் திருமணம் இருக்க, மணமகன் உட்பட, அவரது குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வந்து அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362