×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்ப சூழ்நிலை.. பார்ட் டைம் வேலை செய்த மாணவருக்கு நேர்ந்த சோகம்.. கதறும் குடும்பத்தினர்..!

குடும்ப சூழ்நிலை.. பார்ட் டைம் வேலை செய்த மாணவருக்கு நேர்ந்த சோகம்.. கதறும் குடும்பத்தினர்..!

Advertisement


குரோம்பேட்டை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் சேலையூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேஸ்வரன் குடும்ப சூழ்நிலையின் காரணமாக பார்ட் டைம் வேலையாக "ஜெப்டோ" என்ற ஆன்லைன் ஆப் வாயிலாக மளிகை மற்றும் உணவுப் பொருட்களை சப்ளை செய்யும் வேலை செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து மகேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு உணவு சப்ளை செய்வதற்காக குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்‌. அப்போது அவர் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று மகேஸ்வரன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மகேஸ்வரன் நிலை தடுமாறி அங்கிருந்த தடுப்பு சுவரின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீஸாரக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் மகேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #student #died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story