கனமழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காது..!! அமைச்சர்க்கே என் நேரு பேட்டி..!!!
கனமழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காது..!! அமைச்சர்க்கே என் நேரு பேட்டி..!!!
16 சுரங்கப்பாதையிலும் இரவு பெய்த மழையில் நீர் தேங்கவில்லை, அமைச்சர் கே.என்.நேரு.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியது;- கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும் கடந்த பத்து நாட்களில் 485 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இரவு பெய்த மழையில் சென்னையில் உள்ள16 சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கவில்லை. உடனே வெளியேறிவிட்டன. ஒரு சில இடங்களில் மட்டுமே மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டன. . புளியந்தோப்பு, கொளத்தூர் போன்ற இடங்களில் மழை நீர் தேங்கவில்லை.
இந்நிலையில், 169 நிவாரண மையங்கள், ஒரே நேரத்தில் 2 லட்சம் பேருக்கு உணவு பொட்டலம் தயாரிக்க சமையல் கூடங்கள் தயார்நிலையில் இருக்கின்றன. எந்த இடத்திலும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் கனமழை பெய்தாலும் மழைநீர் தேங்காது. என்று அவர் கூறினார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362