×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

200 சவரன் நகை, ரூ.2 கோடி ரொக்கம், சொகுசு கார் வரதட்சணை கொடுத்ததும் பத்தலை... இரண்டாவது திருமணம் செய்த ஈரோடு இளைஞர்..!

200 சவரன் நகை, ரூ.2 கோடி ரொக்கம், சொகுசு கார் வரதட்சணை கொடுத்ததும் பத்தலை... இரண்டாவது திருமணம் செய்த ஈரோடு இளைஞர்..!

Advertisement

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, காளிங்கராயன்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்தீபன். இவரின் மகள் யுத்தி. இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். அங்குள்ள முத்துக்கவுண்டன்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் - தமிழ்செல்வி. இவர்களின் மகன் சந்தோஷ்.

சந்தோஷுக்கும் - யுத்திக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், திருமணத்தின்போது 200 சவரன் நகை, ரூ.1 கோடி ரொக்கம், சொகுசு கார், விலையுயர்ந்த வாட்ச், செல்போன் வரதட்சணையாக கொடுக்கப்பட்டு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

தற்போது 3 மாத கைக்குழந்தையுடன் யுத்தி இருந்து வரும் நிலையில், தனியாக தொழில் செய்கிறேன் என மனைவியின் பெற்றோரிடம் இருந்து சந்தோஷ் ரூ.1 கோடி பணமும் பெற்றுள்ளார். இதற்கிடையில் தாயின் வீட்டிற்கு மனைவியை அனுப்பி வாய்த்த சந்தோஷ், பிரியங்கா என்ற பெண்மணியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த தகவலை அறிந்த யுத்தி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் சந்தோஷ், அவரின் பெற்றோர்கள் சுரேஷ் - தமிழ்செல்வி, சகோதரர் சங்கீத், அவரின் மனைவியான அண்ணி ஹரி nanthini, பிரியங்கா ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இவர்களை அதிஅக்ரிகல் தேடி வருகின்றனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#erode #tamilnadu #marriage #dowry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story