×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவர் இறந்த நாளில், மனைவியும் விஷம் குடித்து தற்கொலை.. கண்ணீர் சோகம்.!

கணவர் இறந்த நாளில், மனைவியும் விஷம் குடித்து தற்கொலை.. கண்ணீர் சோகம்.!

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், கொமாரபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவரின் மனைவி சாந்தி (வயது 45). தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 

கடந்த வருடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த பழனிச்சாமி, சிகிச்சை பலனின்றி மே 7 ஆம் தேதி உயிரிழந்தார். கணவரின் இழப்பை தாங்க இயலாத மனைவி சாந்தியோ, கணவரின் எண்ணமாகவே இருந்து வந்துள்ளார். 

கணவரின் இறப்புக்கு பின்னர் மகன்களுடன் சாந்தி வசித்து வந்த நிலையில், நேற்று காலை நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். தாயிடம் மகன் என்ன என்று விசாரிக்க, அப்பா இறந்த நாளில் நானும் இறந்து அவருடன் செல்கிறேன் என்று விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்டு பதறிப்போன மகன் தாயை காரில் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் சாந்தியை சோதித்துவிட்டு வரும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#erode
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story