இரயில்வே பெண் காவலரை பலாத்காரம் செய்ய முயற்சி.. டி.எஸ்.பி கார் ஓட்டுநர் கைது.! ஈரோட்டில் அதிர்ச்சி.!!
இரயில்வே பெண் காவலரை பலாத்காரம் செய்ய முயற்சி.. டி.எஸ்.பி கார் ஓட்டுநர் கைது.! ஈரோட்டில் அதிர்ச்சி.!!
ஈரோடு இரயில்வே காவல் அதிகாரியாக பணியாற்றி வரும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சேலம் புறநகர் டி.எஸ்.பி கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு பழைய இரயில் நிலைய பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 32). இவர் சேலம் புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ஈரோடு இரயில்வே பெண் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இதே குடியிருப்பில், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் 29 வயது பெண் இரயில்வே அதிகாரி வசித்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை. பெண் காவலரிடம் நட்பாக செல்வன் பழகி வந்த நிலையில், சம்பவத்தன்று பெண்மணி வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது, அவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்த செல்வன், பெண் காவல் அதிகாரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவல் அதிகாரி, கூச்சலிட்டவாறு வீட்டினை விட்டு வெளியே வந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து விஷயத்தை கேட்டறிந்து, சூரம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு செல்வனின் மீது பெண் வன்கொடுமை தடைச்சட்டம், கொலை மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362