×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

50 யூனிட் மின்சாரத்திற்கு ரூ.95 ஆயிரம் EB பில் : ஈரோட்டில் பேரதிர்ச்சி சம்பவம்.. அதிர்ந்துபோன கூலித்தொழிலாளி.!

50 யூனிட் மின்சாரத்திற்கு ரூ.95 ஆயிரம் EB பில் : ஈரோட்டில் பேரதிர்ச்சி சம்பவம்.. அதிர்ந்துபோன கூலித்தொழிலாளி.!

Advertisement

மாதத்திற்கு 50 யூனிட் மின்சாரம் பயன்படுத்தாத வீட்டிற்கு ரூ.95 ஆயிரம் மின்சார கட்டணம் என குறுஞ்செய்தி சென்றதால் கூலித்தொழிலாளி பதறிப்போனார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ரேவண்ணா (வயது 40). இவர் கூலித்தொழிலாளி ஆவார். தனது வீட்டிற்கு 40 யூனிட் முதல் 50 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தி வந்துள்ளார். 

அரசின் திட்டப்படி வீட்டிற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதால், ரேவண்ணா தனது வீட்டிற்கு மினக்கட்டணமே செலுத்தவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று அவரின் செல்போனுக்கு ரூ.94,985 மின்கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ந்துபோன ரேவண்ணா, தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ரேவண்ணாவின் புகாரை ஏற்ற அதிகாரிகள், மின்கட்டண குளறுபடியை சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, ரேவண்ணா நிம்மதிப்பெருமூச்சு விட்டார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Erode District #Current bill #tamilnadu #Tamilnadu electricity
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story