கொடுமையிலும் கொடுமை... ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனியே அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது...
அட என்ன கொடுமை இது !!கர்ப்பமான சிறுமி... கைதான வாலிபர்.!
ஈரோடு அருகே நடந்த கொடுமை. ஈரோட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவரை காணவில்லை என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில் சிறுமியின் எதிர்வீட்டைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் என்பதும் இவர் அச்சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அறிந்த தினேஷ்குமார் அச்சிறுமியை அழைத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து சிறுமியை தினேஷ்குமாரிடம் இருந்து மீட்ட போலீசார் தினேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்செய்தி ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது