×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விவாகரத்து உறுதியானதால் சட்டக்கல்லூரி மாணவி விபரீத முடிவு - ஈரோட்டில் சோகம்.!

விவாகரத்து உறுதியானதால் சட்டக்கல்லூரி மாணவி விபரீத முடிவு - ஈரோட்டில் சோகம்.!

Advertisement

நீதிமன்றம் விவகாரத்தை உறுதி செய்ததால், சட்டக்கல்லூரி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் மெகபூப் பாஷா. இவரின் மகள் ஷாஹினா பீவி (வயது 30). இவர் கோயம்புத்தூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் பி.எல் இறுதி வருடம் பயின்று வந்துள்ளார். 

இவருக்கும், முகமது உவைஸ் என்பவருக்கும் இடையே, கடந்த சில வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ள நிலையில், ஷாஹினா பீவி - முகமது உவைசிக்கு இடையே கருத்து வேறுபாடானது ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, கடந்த 2018 ஆம் வருடம் சாஹினா பீவி கணவரை பிரிந்து தாயாரின் வீட்டில் தங்கியிருந்தவாறு கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். கணவன் - மனைவி விவாகரத்து கோயம்புத்தூர் குடும்ப நல கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மகனை எப்படி காப்பாற்றுவது என மன வருத்தத்தில் இருந்து வந்த சாஹினா பீவி, படிப்பதற்கு வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் கீழே வரவில்லை. 

மேல் அறைக்கு சென்று பார்க்கையில் ஷாஹினா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.  இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#erode #Gobichettipalayam #tamilnadu #divorce #suicide #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story