×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆழம் தெரியாமல் கால்களை விட்டதால் பரிதாபம்; நண்பர்களுடன் குளிக்கச்சென்ற மாணவர் மரணம்.!

ஆழம் தெரியாமல் கால்களை விட்டதால் பரிதாபம்; நண்பர்களுடன் குளிக்கச்சென்ற மாணவர் மரணம்.!

Advertisement

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், புஞ்சை புளியம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம். இவரின் மகன் கிஷோர் (வயது 15). புளியம்பட்டி பகுதியில் கே.வி.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

நேற்று தனது நண்பர்கள் ஐவருடன் கீழ்பவானி வாய்களில் குளிக்க சென்றுள்ளார். அங்கு நண்பர்கள் அனைவரும் குளித்துக்கொண்டு இருந்த நிலையில், நீர்க்கசிவு காரணமாக பவானியில் இருந்து கீழ் பவானிக்கு வரும் நீர் நிறுத்தப்பட்டது. 

ஆங்காங்கே இருக்கும் தடுப்புகளில் நீர் நிரம்பி காணப்பட்ட நிலையில், ஆழம் தெரியாமல் கிஷோர் நீருக்குள் சென்று சிக்கிக்கொண்டார். அவர் தன்னை காப்பாற்றக்கூறி அலறவே, நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து உதவி செய்வதற்குள் நீருக்குள் மூழ்கிப்போயினர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#erode #Gobi #tamilnadu #student #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story