×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படியில் நின்று பயணித்த கல்லூரி மாணவி, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பகீர் சம்பவம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ.!

படியில் நின்று பயணித்த கல்லூரி மாணவி, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பகீர் சம்பவம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ.!

Advertisement

கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாடார்மேடை பகுதியில் வசித்து வருபவர் வர்ஷினி. இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி வழக்கம் போல ஈரோடு நாடார்மேடு பேருந்து நிறுத்தத்திற்கு வந்த வர்ஷினி தனது கல்லூரிப் பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது பேருந்து சாஸ்திரி நகர் பிரிவு வளைவில் சென்று கொண்டிருக்கும்போது, பேருந்தின் முன்கதவு எதிர்பாராதவிதமாக திறந்துள்ளது. இதனால் பேருந்தின் உள்ளே இருந்த மாணவி வர்ஷினி தவறி சாலையில் விழுந்த நிலையில்,  மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் மற்றும் சக மாணவிகள் ஆகியோர் வர்ஷினியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், மாணவிக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். கல்லூரி  மாணவி பேருந்தில் இருந்து கீழே விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#erode #cctv #college student #bus #slipping
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story