×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொறியியல் பட்டதாரி வாலிபர் தற்கொலை: தீராத வயிற்றுவலி காரணமா?!.. போலீஸ் விசாரணை..!

பொறியியல் பட்டதாரி வாலிபர் தற்கொலை: தீராத வயிற்றுவலி காரணமா?!.. போலீஸ் விசாரணீ..!

Advertisement

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள பன்னீர்குளம் கிராம பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவர் ஒரு விவசாயி. இவரது மகன் சந்தோஷ்குமார் (24). பொறியியல் பட்டதாரியான இவர் வேலை தேடிவந்தார்.

இந்த நிலையில், சந்தோஷ்குமார் அடிக்கடி வயிற்று வலி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயிற்று வலி தீர சிகிச்சை எடுத்துவந்த சந்தோஷ்குமாருக்கு வலி குறையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையடைந்த அவர்,கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.

பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த சந்தோஷ்குமாரை மீட்ட அவரது உறவினர்கள், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கயத்தாறு காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tuticorin District #Kayatharu #Stomach Ache #Commits Suicide #police investigation #Engineering Graduate
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story