தமிழகத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்! தேர்தலுக்கான தேதி அறிவிப்பு!
election date announced
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என்றும். அதற்கான அறிவிப்பாணை டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும். உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 -ஆம் தேதி நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13, வேட்பு மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 18ம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362