நாளை வெளியாகிறது உள்ளாட்சி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல்!
election candidate list
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் நாளை வெளியாகிறது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த மாவட்டங்களில் கடந்த 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்ப பெற நாளை கடைசி நாள் என்பதால், நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பாளர்களுக்கான சின்னங்களும் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362