×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிபோதையில் தகராறு.. தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்.!

குடிபோதையில் தகராறு.. தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்.!

Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது பணியை இளைய மகன் தாமோதரனுக்கு மின்வாரியத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இளைய மகன் தாமோதரன் குடிபோதையில் தனது தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வீட்டின் ஜன்னல் கதைகளை அடித்து உடைத்து தாயை தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் முருகன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தம்பியை பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக முண்டிய பார்க்க அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடும்ப பிரச்சினையில் அண்ணனே தம்பியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Villupuram #Gingee #Crime #Drunken brother #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story